Sunday 12th of May 2024 07:56:34 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனாவால் பதிக்கப்பட்வர்களை சீன ஜனாதிபதி நேரில் பார்வையிட்டார்!

கொரோனாவால் பதிக்கப்பட்வர்களை சீன ஜனாதிபதி நேரில் பார்வையிட்டார்!


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நேற்று மட்டும் சீனாவில் 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயபளர்களை சீன ஜனாதிபதி ஜின்பிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சீன ஜனாதிபதி ஜின்பிங் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் அல்லோகல்லப்பட்டு கொண்டிருக்கையில் சீன ஜனாதிபதி ஜின்பிங் மட்டும் இரகசிய இடத்தில் கொரோனா வைரஸ் தாக்காதவாறு தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று நோயாளிகளை பார்வையிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முன்னதாக நோயாளிகளை சந்திக்க செல்வதால் நோய்த் தொற்று ஏற்படாது பாதுகாக்கும் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் மற்றும் கையுறைகளை ஜின்பிங் அணிந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE